'தமிழ் மக்களின் உரிமைகளை பேசுவதற்கு தகுதியான கட்சி'

இங்கு கருத்துத் தெரிவித்த ஆனந்த சங்கரி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியான கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி என்றும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கூட்டணியை தொடர்ந்தும் கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.

Oct 14, 2024 - 10:49
'தமிழ் மக்களின் உரிமைகளை பேசுவதற்கு தகுதியான கட்சி'

தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியான கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி மட்டுமே என அக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில், உதயசூரியன் சின்னத்தில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாக யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று (13) ஊடக சந்திப்பை மேற்கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆனந்த சங்கரி, தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியான கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி என்றும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கூட்டணியை தொடர்ந்தும் கட்டியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், யாழ். தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் கௌரி நித்தியானந்தம் கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர், யுவதிகளை முன்னிலைப்படுத்தி, தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை 5 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. 1972ஆம் ஆண்டு, தந்தை செல்வா, ஜீ ஜீ பொன்னம்பலம் மற்றும் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஆகியோர் இணைந்து செயற்படுத்திய தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக மீண்டும் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்கியிருக்கின்றோம்” என்றார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.