தனியார் வகுப்பு சென்ற மாணவி சடலமாக மீட்பு
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற 17 வயதுடைய மாணவி மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து இன்று(21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனியார் வகுப்புகளுக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற 17 வயதுடைய மாணவி மஹியங்கனை லொக்கலோ ஓயாவில் இருந்து இன்று(21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு வீட்டை விட்டு சென்றிருந்த இரண்டு மாணவிகளில் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவேளை, குறித்த வீதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்திய மாணவி ஒருவர், தன்னை பஸ் ஒன்றில் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார்.
இதன் போது குறித்த மாணவி மீது சந்தேகம் கொண்ட நபர் அந்த மாணவியை ஏற்றிக்கொண்டு வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (20) காலை வீட்டில் இருந்து சென்ற இந்த இரண்டு மாணவிகளும் வீடு திரும்பாத நிலையில், பதுளை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |