பன்றிகளை கொண்டு செல்ல தடை; பன்றி இறைச்சியால் ஆபத்து?

பன்றி இறைச்சியை உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

Oct 18, 2024 - 09:07
Oct 18, 2024 - 09:24
பன்றிகளை கொண்டு செல்ல தடை; பன்றி இறைச்சியால் ஆபத்து?

நாட்டில் பல பகுதியில் தொற்று நோய் காரணமாக பன்றிகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால், பன்றி இறைச்சியை உண்ணும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். 

தொற்று நோய் பன்றிகள் இறந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள போதும், தொற்று இன்னும் கண்டறியப்படவில்லை. இதனால், கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அறிவுறுத்தல் கிடைத்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பன்றிகளை கொண்டு செல்ல தடை

இதேவேளை, மாவட்டங்களுக்கு இடையில் பன்றிகளை கொண்டு செல்வது, இன்று (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பன்றிகளுக்கு பரவும் ஒருவகை வைரஸ் நோய் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்தார்.

மேற்கு, வடமேற்கு உட்பட பல மாகாணங்களில், இந்த வைரஸ் நோய் பரவி வருவதாகவும், அவர் கூறினார்.

மேலும், “இந்த வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நோயினால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சியை உண்பது அங்கிகரிக்கப்படவில்லை” என ஹேமாலி கொத்தலாவல தெரிவித்தார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.