நடிகை ஐஸ்வர்யா ராயின் மெய்க்காப்பாளரின் சம்பளம் எவ்வளவு ?
நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியே செல்லும்போது, அவரை காண்பதற்காக ரசிகர் கூட்டம் திரண்டு விடும். அவரை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை சிவராஜ் மேற்கொண்டு வருகிறார்.
நடிகர், நடிகைகள் தங்களுடைய பாதுகாப்புக்காக என்று மெய்க்காப்பாளர்களை வைத்து கொள்வார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, மெய்க்காப்பாளர்கள் அவர்களை சுற்றி பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மெய்க்காப்பாளராக இருப்பவர் சிவராஜ். நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியே செல்லும்போது, அவரை காண்பதற்காக ரசிகர் கூட்டம் திரண்டு விடும். அவரை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை சிவராஜ் மேற்கொண்டு வருகிறார்.
2015-ம் ஆண்டு சிவராஜின் திருமணத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் சென்றார். அதுபற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலாகின.
ஐஸ்வர்யா ராய் வெளியே செல்வது அரிது என்றபோதிலும், எப்போதெல்லாம் அவர் வெளியே செல்கிறாரோ அப்போது, சிவராஜின் பணி தொடங்கி விடும். அப்போது, அவரை ஒருவரும் நெருங்கி விட முடியாது. மெய்க்காப்பாளர்களை பணியில் அமர்த்துவது என்பது அதிக மதிப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நடிகர், நடிகைகளின் மெய்க்காப்பாளர்கள் பல லட்சங்களில் சம்பளம் பெறுகின்றனர். இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மேலதிகாரிகளை விட கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். சிவராஜும் பல லட்சங்களில் சம்பளம் பெறுபவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |