பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக செயலாளர் கூறியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக செயலாளர் கூறியுள்ளார்.
அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த வருடம் வரை அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாடசாலைகளில் மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு முறையாக பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை அறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் வலயக் கல்வி அலுவலகங்கள், உணவு வழங்குனர்களுக்கு பணம் வழங்கவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |