இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Oct 2, 2024 - 10:27
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு

உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது.

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

Brent, WTI இரண்டு எண்ணெய் ரகங்களின் விலையும் ஐந்து சதவீதம் வரை உயர்ந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டில் காணாத விலையேற்றம் அதுவாகும்.

மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகத்துக்கு வரும் எண்ணெயில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படலாம்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் ஏழாவது இடத்தில் உள்ளது. 

தினமும் மூன்று முதல் நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடு ஈரான் ஆகும்.

அது மட்டுமல்லாமல், உலகின் அதி முக்கியமான எண்ணெய் விநியோகச் சந்திப்பான Hormuz நீரிணை ஈரானுக்குப் பக்கத்தில் உள்ளது. 

இஸ்ரேல் மீது ஈரான் திடீரென 180 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான ஜோர்தானின் வான்பரப்பில் அவ் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு, தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.