தோல்விக்கு காரணம் இதுதான்: கேப்டன் ரோஹித் சர்மா செய்த 6 முக்கிய தவறுகள்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டனர் ரோஹித் சர்மா செய்த 6 தவறுகளே தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Oct 20, 2024 - 16:25
Oct 20, 2024 - 16:25
தோல்விக்கு காரணம் இதுதான்: கேப்டன் ரோஹித் சர்மா செய்த 6 முக்கிய தவறுகள்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கேப்டனர் ரோஹித் சர்மா செய்த 6 தவறுகளே தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 31.2 ஓவர்களில் வெறும் 46 ரன்களை மட்டும் சேர்த்து, ஆல்அவுட் ஆனது. ரிஷப் பந்த் (20), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (13) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணியில், ஓபனர் டிவோன் கான்வே 91 (105) ரன்களை குவித்த நிலையில், வில் யங் 33 (73) ஓரளவுகளுக்கு ரன்களை சேர்த்தார். கேப்டன் டாம் லதாம் 15 (49), டேரில் மிட்செல் 18 (49), டாம் பிளெண்டில் 5 (8), கிளென் பிலிப்ஸ் 14 (18) போன்றவர்கள் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை.

இறுதிக் கட்டத்தில், ரச்சின் ரவீந்திரா 134 (157), டிம் சௌதீ 65 (73) ஆகியோர் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணியானது, 356 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.

கடும் பின்னடைவுடன் 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 52 (63), விராட் கோலி 70 (102), சர்பரஸ் கான் 150 (195), ரிஷப் பந்த் 99 (105) ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், இந்திய அணி 433/4 என்ற நல்ல நிலையில் இருந்தது.

இதயும் பாருங்க: தோல்வியால் இந்தியாவுக்கு ஏறப்பட்டுள்ள சிக்கல்.. இறுதிப்போட்டிக்கு போக இதை செஞ்சாகணும்!

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக, அடுத்து வந்த கே.எல்.ராகுல் 12 (16), ரவீந்திர ஜடேஜா 5 (15), ரவிச்சந்திரன் அஸ்வின் 15 (24) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பியதால், இறுதியில், இந்திய அணி 462/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, நியூசிலாந்துக்கு 107 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், 5ஆவது செஷனில்செஷனில், பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தொடர்ந்து, அபாரமாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இந்நிலையில், முதல் ஒவரிலையை பும்ரா, 0 (6) லதாமை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, டிவோன் கான்வே 17 (39), வில் யங்க் 45 (76), ராசின் ரவீந்திரா 39 (46) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 107/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இதயும் பாருங்க:  ‘தோல்விக்கு காரணம் இதுதான்... மனந்திறந்த ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நீக்கமா?

மழை பெய்ததால், பிட்ச் துவக்கத்தில் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் எனத் தெரிந்தும் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோலி 4ஆவது இடத்தில் களமிறங்கும் நிலையில், இப்போட்டியில் 3ஆவது இடத்தில் ஆட வைத்தார்கள். 

வேகத்திற்கு சாதகமான பிட்சில் 2 பாஸ்ட் பௌலர்களுடன்தான் ஆடினோம். முதல் இன்னிங்ஸில் ரோஹித் இரண்டு முக்கிய கேட்ச்களை தவறவிட்டார். நியூசிலாந்து அணி 233/7 என இருந்த நிலையில், அடுத்து 402/10 ரன்கள்வரை அடிக்கவிட்டார்கள். 4ஆவது இன்னிங்ஸில், அஸ்வினுக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.