சிறீதரன் தலைமையிலான தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

இன்று முற்பகல் 9.40 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

Oct 10, 2024 - 18:03
சிறீதரன் தலைமையிலான தமிழரசுக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இன்று முற்பகல் 9.40 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சந்திரஹாசன் இளங்கோவன், இம்மானுவேல் ஆனால்ட், கேசவன் சயந்தன், தியாகராஜா பிரகாஷ் , சந்திரலிங்கம் சுகிர்தன், கிருஷ்ணவேணி சிறீதரன், சுரேகா சசீந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

மேற்படி 9 வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்களின் பின்னர் தந்தை செல்வா நினைவுச் சதுர்க்கத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வீட்டுச் சின்னத்தில் களமிறங்குகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.