மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயது மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். 

Jun 23, 2024 - 16:36
மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயது மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். 

இதற்கிடையே 17 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவள் அரிக்கோட்டில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் அரிக்கோடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும், கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் சிறுமி கோழிக்கோடு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். இதையடுத்து டாக்டர்களின் வழிகாட்டுதலின் பேரில் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி நீதிமன்றில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிறுமியின் தந்தைக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 104 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ரெஸ்மி தீர்ப்பளித்தார்.

மேலும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கூறி அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த நபரை தவனூர் சிறையில் அடைத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.