யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் திடீர் மரணம்
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் திடீர் சுகவீனம் காரணமாக புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செந்திவேல் தமிழினியன் (வயது 33) திடீர் சுகவீனம் காரணமாக புதன்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இவர், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் ஆவார்.
திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளம் வேட்பாளர், அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |