வீடியோ விவகாரம்: நடிகை ஓவியா பொலிஸாரிடம் புகார்!
ஆபாச வீடியோ குறித்து ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாக ஒரு வீடியோவில், தன் முகத்தை மார்ப்பிங் செய்து வெளியிட்டதாகவும், இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, நடிகை ஓவியா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓவியா குறித்து சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியானது. இதன் மூலம் சமூகவலைதளங்களில், ஓவியா குறித்த செய்திகள் வைரலாக பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
ஆபாசமான இந்த வீடியோவில், ஓவியாவை போன்று தோளில் பச்சை குத்திய பெண் ஒருவரை காட்டுவததால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த வீடியோ குறித்து ஓவியா இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
இருப்பினும், அவர் ஆன்லைனில் எதிர்கொள்ளும் துன்புறுத்தலை நிவர்த்தி செய்ய இன்ஸ்டாகிராமில் தனக்கு வரும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த ஆபாச வீடியோ குறித்து ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
தவறான வீடியோவை பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஓவியா உறுதியுடன் இருப்பதாகவும், ஆனால் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்த்தார் ஓவியா தவிர்த்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |