நீலாம்பரி முன்பு இந்த படையப்பா மானமே போச்சு: ரஜினி
24 ஆண்டுகள் கழித்து நீலாம்பரிக்கு முன்பு இந்த படையப்பாவின் மானமே போச்சு என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் ரஜினி.
24 ஆண்டுகள் கழித்து நீலாம்பரிக்கு முன்பு இந்த படையப்பாவின் மானமே போச்சு என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் ரஜினி.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சியை நேற்று சன் டிவியில் ஒளிபரப்பு செய்தார்கள். மேடையில் ரஜினி பேசியது அனைவரையும் கவர்ந்துவிட்டது.
படையப்பா படத்தில் ரஜினியை திருமணம் செய்து கொள்ள விரும்புவார் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன். ஆனால் ரஜினிக்கு நீலாம்பரியை பிடிக்காது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
24 ஆண்டுகள் கழித்து படையப்பாவை திருமணம் செய்து கொண்டார் நீலாம்பரி என்கிறார்கள் ரசிகர்கள். நீலாம்பரியின் பல வருட ஆசையை நிறைவேற்றி வைத்துவிட்டார் நெல்சன் என விமர்சனம் எழுந்துள்ளது.
ரம்யா கிருஷ்ணனும் நானும் வரும் காட்சியை படமாக்கினார் நெல்சன். ரம்யா கிருஷ்ணனிடம் நான் எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டும்.
நான் கொடுத்த எக்ஸ்பிரஷன் நெல்சன் திலீப்குமாருக்கு திருப்தியாக இல்லை. 8 டேக் போச்சு. 24 ஆண்டுகளுக்கு பிறகு நீலாம்பரி முன்பு இந்த படையப்பனோட மானமே போச்சு என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02 |